சூர்யாவுக்கும் சுகானாவிற்கும் ஒரே ஆச்சர்யம் தாத்தா
ஏன் தாடியோட வந்திருக்காங்கனு. அப்போதான் அவங்க
கவனிச்சாங்க, தாத்தா தாடிக்குள்ள இருந்து குரல் கேட்குது.
ரொம்ப ஆச்சர்யபட்டுகிட்டே கிட்ட போய் பார்த்தா தான் தெரியுது தாத்தா தாடிக்குள்ள சித்திர குள்ளர்கள் நிறைய பேர் இருக்காங்க. ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு வண்ணத்துல இருக்காங்க. இவங்களுக்கு ஒரே ஆச்சர்யம். தாத்தா, இந்த சித்திர குள்ளர்கள் பத்தி யார் கிட்டயும் சொல்லாம இருந்தா உங்களுக்கு இன்னும் நிறைய அதிசயங்கள் அவங்க காட்டுவாங்கனு சொல்றாங்க. இவங்களும் சரினு அதுக்கு ஒத்துகிட்டாங்க. அப்புறம் அதுல இருந்து ஒரு சித்திரகுள்ளர் அவரோட கையில இருக்கும் வண்ணப்பொடியை சூர்யா மேலயும், சுகானா மேலயும் தூவுறாங்க, உடனே சூர்யாவும் சுகானாவும் சித்திர குள்ளர்கள் மாதிரியே சின்னதா ஆகிடறாங்க. தாத்தாவும் தான். இதுக்கு அப்புறம் இவங்க எல்லோரும் சேர்ந்து பண்ணுற சாகசங்களை பத்தி தெரிஞ்சுக்கனும்னா இந்த புத்தகத்தை வாங்கி படிங்க.

